குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 March 2023 8:45 PM GMT (Updated: 31 March 2023 8:46 PM GMT)

குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). இவருடைய மனைவி பெருமாள்ராணி (27). கணேசன், தனது குடும்பத்துடன் கோவை பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணேசன் ஆயக்குடிக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று இவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story