தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு


தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு சாவு
x

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் எம்.சி.ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கலையரசன் (வயது 54) தச்சுத்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு தமிழரசி என்கிற மனைவியும் 3 மகன் கள் 2 மகள்கள் உள்ளன.நேற்று கலையரசன் விண்ணமங்கலம் ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது காட்பாடி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story