கோவையில் 2-வது முறையாக கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்...!


கோவையில் 2-வது முறையாக கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்...!
x

கோவையில் இளம்பெண் தனது 2 பெண் குழந்தைகளுடன் மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கள்ளக்காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் அவரிடம் அறிவுரை கூறி அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதன் பின்னரும் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் பழகி வந்தார். அவரது கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் இருந்த இளம்பெண் தனது 2 பெண் குழந்தைகளுடன் மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து அவரது கணவர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2-வது முறையாக கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.


Next Story