கடலூரில் இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை


கடலூரில் இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:47 PM GMT)

கடலூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 53). இவரது மகள் நந்தினி (வயது 23). பி.ஏ. படித்து முடித்துள்ள இவர், வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நந்தினி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட நந்தினியின் உடலை பார்வையிட்டு, உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சண்முகம், புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி உடல்நல பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story