சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலி


சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலி
x

வேடசந்தூர் அருகே பழைய துணிகளை எரித்தபோது சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலியானார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள வெல்லம்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சவுடீஸ்வரி (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் சவுடீஸ்வரி பழைய துணிகளை வீட்டு முன்பு போட்டு மண்எண்ணெயை ஊற்றி தீ பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக தீ சவுடீஸ்வரியின் சேலையில் பிடித்தது. அது வேகமாக உடல் முழுவதும் பரவியது. அவர் அய்யோ, அம்மா என அலறி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவருடைய உடலில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சவுடீஸ்வரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story