இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம் ஆனார்.
தரகம்பட்டி அருகே உள்ள தேக்கமலை கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் இளஞ்சியம் (வயது 21). இவர் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் இளஞ்சியம் வேலைக்கு சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் இளஞ்சியத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரின் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இளஞ்சியத்தை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





