திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது


திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
x

திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 34). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் பாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும், 24 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் நெருங்கி பழகினர்.

இதற்கிடையே பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகியது குறித்து அந்த இளம்பெண்ணுக்கு தெரியவரவே, அவர் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள பாலகிருஷ்ணன் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி பாலகிருஷ்ணன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் சார்பில் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.


Next Story