பாம்பு சென்ற அச்சத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்த வாலிபர் சாவு


பாம்பு சென்ற அச்சத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்த வாலிபர் சாவு
x

பாம்பு சென்ற அச்சத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

நண்பர்கள்

பெரம்பலூர் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரபு(வயது 26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியின் மகன் மாரிமுத்து(வயது 27). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் கடந்த 15-ந்தேதி வாலிகண்டபுரத்தில் உறவினரின் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபு ஓட்ட, பின்னால் மாரிமுத்து அமர்ந்திருந்தார். நவாப் சிட்டி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றது. இதனை கண்ட அச்சத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பிரபுவும், மாரிமுத்துவும் படுகாயமடைந்தார்.

சாவு

இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாரிமுத்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், பிரபு திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். பிரபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story