குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமோகன், கொத்தனார். இவரது மனைவி சித்ராதேவி (வயது 25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சித்ராதேவியை அவரது கணவர் சந்திரமோகன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் குடும்பத் தகராறு காரணமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த சித்ராதேவி கடந்த 4-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக்கண்ட அவரது கணவர் குடும்பத்தினர் சித்ராதேவியை மீட்டு திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ராதேவி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சித்ராதேவியின் தந்தை துரைச்சாமி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story