ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளத்தூர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் திவ்யா (22). இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். திவ்யா சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு இந்த வலி தீரவில்லை.

நேற்று காலை திவ்யாவிற்கு கடுமையாக வயிற்று வலியால் அவதியடைந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திவ்யா மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். திவ்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திவ்யாவின் தந்தை கோவிந்தராஜ் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story