காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
x

திண்டுக்கல் அருகே, காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த குட்டத்துஆவாரம்பட்டி அருகே உள்ள குஞ்சனம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், கேரளாவில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். அப்போது கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த ரேஷ்மா (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் திண்டுக்கல்லில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் மணிகண்டன் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரேஷ்மா, நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரேஷ்மா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரேஷ்மாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story