ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி


ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி
x

சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தனமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற 1-ந்தேதி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல முதலில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, கோவில் அருகே பற்றிய காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படாததால், அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை நேற்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது தீயை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story