வாயில் துணிகட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வாயில் துணிகட்டி  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வாயில் துணிகட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

தேவகோட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகராட்சி அருகில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் முன்னிலை வகித்தார். இதில் நகர் தலைவர் லோகநாதன், கண்ணகுடி வட்டார தலைவர் ராஜ்மோகன், தேவகோட்டை வட்டார தலைவர்கள் பிரபாகரன் (தெற்கு), வெங்கடாசலம் (வடக்கு) மற்றும் நஜ்முதீன், பூங்குடி செல்லம், தனுஷ்கோடி, செந்தில் குமார், கவுன்சிலர் பழனிவேல், மூர்த்தி, சிவக்குமார், நாகராஜன், அரசு, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story