கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சிவகாமி நகரை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 38). 2019-ம் ஆண்டு ராமநாதபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் இவர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் திசையன்விளையில் ஆட்டோ ஓட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு போலீசார், திசையன்விளை போலீசார் உதவியுடன் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் பழனிகுமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





