தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருப்பத்தூர்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறை சார்பில் ஷிரத்தாஞ்சலி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலகத்தில் தூய்மை பணியை மேற்கொண்டு மரக்கன்று நட்டனர். இதையடுத்து அஞ்சல் ஊழியர்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அஞ்சல் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story