நரசிங்காபுரம் பகுதியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

நரசிங்காபுரம் பகுதியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
பொள்ளாச்சி
தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜூலியா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ராமபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்காபுரம் பகுதியில் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் கொள்கைகளான அகிம்சை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், எளிமை ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத நல்லிணக்க உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு ஆகியன குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சத்யா வரதராஜன் செய்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





