வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி


வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 July 2023 7:00 PM GMT (Updated: 23 July 2023 7:01 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சம்பவத்தன்று என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள உணவகம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி லட்சுமி மோகனூர் போலீசில் கொடுத்தபுகாரின் பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story