மொபட் மீது ஸ்கூட்டர் மோதி விவசாயி பலி


மொபட் மீது ஸ்கூட்டர் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:45 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி தனது பேத்தி அபூர்வாவுடன் ஒரு மொபட்டில் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஸ்கூட்டர் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். துரைசாமி பலத்த காயமடைந்தார். அபூர்வா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார் துரைசாமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story