நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி மாமனார் படுகாயம்


நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி மாமனார் படுகாயம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:00 PM GMT (Updated: 25 Oct 2023 7:01 PM GMT)

நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார். மாமனார் படுகாயம் அடைந்தார்

நாமக்கல்

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே நடந்த விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார். அவருடைய மாமனார் படுகாயம் அடைந்தார்.

குடிநீர் குழாய்கள்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள புதுப்பட்டி வாணிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மாமனாரான பேளுக்குறிச்சி அருகே மேலப்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் (65) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் இருந்து புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை மாரியப்பன் ஓட்டினார். கருப்பண்ணன் பின்னர் அமர்ந்திருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை அருகே ஈச்சம்பாறை அருகே சென்றபோது சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய்கள் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

விசாரணை

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கருப்பண்ணன் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story