மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்திரையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது61). விவசாயி. இவர் சித்திரையூரில் உள்ள மளிகை கடை ஒன்றில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே திருநாட்டியத்தான்குடியை சேர்ந்த வருண் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், துரைசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். இது குறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story