மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
நாமக்கல்
பள்ளிபாளையம்:
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அருகே ஈகாட்டூர் பகுதியில் நடந்து சென்ற சுப்பிரமணி சாலையை கடக்க முயன்றார். அப்போது பள்ளிபாளையம் பகுதியில் இருந்து வெப்படை நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் சுப்பிரமணி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று அதிகாலை இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபாளையத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (23) காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுப்பிரமணி மகன் மணிகண்டன் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






