திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பிளஸ்-1 மாணவர் பலி நண்பர் காயம்


திருச்செங்கோடு அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பிளஸ்-1 மாணவர் பலி  நண்பர் காயம்
x

திருச்செங்கோடு அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பலியானார். அவருடைய நண்பர் காயம் அடைந்தார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பலியானார். அவருடைய நண்பர் காயம் அடைந்தார்.

பிளஸ்-1 மாணவர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் கவின் (வயது 20). பெயிண்டர். இவருடைய நண்பர் திருப்பதி (17). இவர் சித்தாளந்தூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார்சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சித்தாளந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை கவின் ஓட்டினார். திருப்பதி பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது பனங்காடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் மீது கவின் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

விசாரணை

இதில் தூக்கி வீசப்பட்டு திருப்பதி படுகாயம் அடைந்தார். கவின் காயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருப்பதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story