வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
x

வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மகன் சக்திவேல் (வயது 35). இவர் முதுகுளத்தூரில் கடை வைத்துள்ளார். இவருக்கு உமயகலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது ரோட்டில் குறுக்கே வந்த மாடு மீது மோதி கீழே விழுந்ததில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச் சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப ்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது மனைவி உமயகலா முன்வந்தார். இதையடுத்து உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. கணவர் இறந்த நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த சக்திவேல் மனைவியை டாக்டர்கள் பாராட்டினர்.


Next Story