பள்ளிபாளையம் அருகே அரசு- தனியார் பஸ் மோதல்; பயணிகள் காயம்

பள்ளிபாளையம் அருகே அரசு- தனியார் பஸ் மோதல்; பயணிகள் காயம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே 5 பனை பகுதியில் நேற்று மாலை திருச்செங்கோட்டில் இருந்து அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனியார் பஸ் வந்தது. அந்த சமயம் 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து சேதம் அடைந்தன. சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





