விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலி


விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 40). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (36). இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் நேற்று காலை மொபட்டில் புதுப்பாளையத்தில் இருந்து பெரியகாடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராதா லேசான காயத்துடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story