விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலி

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 40). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (36). இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் நேற்று காலை மொபட்டில் புதுப்பாளையத்தில் இருந்து பெரியகாடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராதா லேசான காயத்துடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





