மோகனூர் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சாவு


மோகனூர் அருகேமோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சாவு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:30 AM IST (Updated: 14 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் இறந்தார்.

மேற்பார்வையாளர்

பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்லைமேடு குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). இவர் மோகனூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து மதுக்கடைக்கு போவதாக கூறி சென்றார். பின்னர் மாலை 5 மணியளவில் மோகனூர் அருகே மணப்பள்ளி அருகே உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் வந்தபோது சிவக்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீேழ விழுந்தார்.

விசாரணை

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சிவக்குமார் மனைவி வள்ளி மனோகரி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

1 More update

Next Story