லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 March 2023 7:00 PM GMT (Updated: 9 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே காரப்பள்ளி பிள்ளையார் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-ந் தேதி இரவு ஓசூர்- பெங்களூரு சாலையில் ஜூஜூவாடி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி தேவராஜ் மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story