பாலக்கோடு அருகேமோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம்
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 40). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டில் இருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்கோடு ஸ்தூபி மைதானம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாதுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மாதுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story