மோகனூர் அருகேவிபத்தில் கியாஸ் நிறுவன ஊழியர் பலி


மோகனூர் அருகேவிபத்தில் கியாஸ் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2023 7:00 PM GMT (Updated: 3 Jun 2023 7:26 AM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் கியாஸ் நிறுவன ஊழியர் பலியானார்.

கியாஸ் நிறுவன ஊழியர்

மோகனூர் அருகே ராசிபாளையம் ஊராட்சி காட்டு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேணுகுமார் (வயது 43). இவர் மோகனூரில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மோகனூரில் உள்ள வளையப்பட்டி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேணுகுமாரை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மணிமேகலை மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான வேணுகுமாருக்கு 8 மற்றும் 6 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.


Next Story