வாகனம் மோதி வாலிபர் பலி


வாகனம் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2023 7:00 PM GMT (Updated: 12 Jun 2023 7:11 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கீரனூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 25). இவர் ஓசூர் பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 1-ந் தேதி இரவு சிலம்பரசன் பாகலூர்- சர்ஜாபுரம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story