நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.    அமோக வெற்றி பெறும்  ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா பேச்சு
x

அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடிகை விந்தியா பேசினார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்,

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு, கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்றார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட துணைச்செயலாளர் தங்கமணி,ஒன்றிய செயலாளர் சேகர், ரஞ்சித், முருகேசன், மணி, ராமசாமி, ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னத்தம்பி, மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகையும், கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என அனைவரும் விடியல் ஆட்சி தருவோம் என்றார்கள். மதுவிலக்கு கொண்டு வருவோம் என்றார்கள். ஆனால் இன்றைக்கு தி.மு.க. கட்சியில் மின்சாரத்தை தொட்டால் மட்டுமல்ல மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.

அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்

கஜானாவில் பணம் இல்லை என்று கூறிவிட்டு மக்கள் நலப்பணிக்காக கனத்த இதயத்துடன் இந்த மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக மின்சார துறை அமைச்சர் கூறுகிறார். அவர்கள் அப்படி என்ன மக்கள் நலப்பணி செய்கிறார்கள் என்றால், சென்னை மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கும் வேலையை தான் செய்கிறார்கள். மின் கட்டணத்தை உயர்த்தி இந்த சிலை தேவை தானா?

அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜனதா ஆட்சி வந்து விடும் என்று பொய்யான கதையை ெசால்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இன்று தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மீண்டும் தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற அ.தி.மு.க. மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். விரைவில் அடுத்து வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்

கூட்டத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் நரசிங்கபுரம் நகர செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Next Story