சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்: பதிவுத்துறை தகவல்


சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்: பதிவுத்துறை தகவல்
x

வருகிற 15-ந்தேதி தைப்பொங்கலை அடுத்து வரும் நாட்களில் அதிகளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகிற 15-ந்தேதி தைப்பொங்கலை அடுத்து வரும் நாட்களில் அதிகளவில் ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான காலத்தில் வரும் அனைத்து வேலைநாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story