இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை


இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 24 Jun 2023 6:32 PM GMT (Updated: 25 Jun 2023 6:29 AM GMT)

சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியில் இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

பி.ஏ.தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.


Next Story