அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம்


அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைஞாயிறு கிழக்கு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சவுரிராஜன், சுப்பையன், கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேரூர் செயலாளர் பிச்சையன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி கிடையாது என்று அறிவித்ததை தொடர்ந்து, தி.மு.க. கலங்கி போய் உள்ளது என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி நைனா முகமது நன்றி கூறினார்.


1 More update

Next Story