அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
x

நெல்லையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, ஸ்ரீவை.சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒரு பூத்திற்கு 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இடம்பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும். தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். நெல்லை மாவட்ட, மாநகரத்தில் பழுதடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story