அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு தள்ளுபடி


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு தள்ளுபடி
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன். இவர் உள்பட சிலர் சேர்ந்து சிவகாசியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை கடத்தி பண மோசடி செய்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜவர்மன், சில போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்தநிலையில் ராஜவர்மன் உள்பட 4 பேர் தங்களுக்கு முன்ஜாமீன்கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கிறிஸ்டோபர் விசாரித்தார். பின்னர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story