அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:30 AM IST (Updated: 9 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாடு தொடர்பாக செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கி பேசினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் சண்முகையா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


1 More update

Related Tags :
Next Story