அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்


அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
x

வாலாஜாவில் அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜா நகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைப்படி, கட்சி உறுப்பினர்கள் சேர்த்தல் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் டபிள்யூ.ஜி.மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ஆய்வு செய்தார். கூட்டத்தில் சுமைதாங்கி சி.ஏழுமலை, எஸ்.எம்.சுகுமார், டபுள்யூ. ஜி.வேதகிரி, எஸ்.மூர்த்தி, மணி, முனிசாமி, பூண்டி பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story