தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. அரசை கண்டித்து தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் கனிமவளங்களை கட்டுப்படுத்தக் கோரியும், கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியானதை கண்டித்தும், தி.மு.க. அரசைக் கண்டித்து தென்காசி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர செயலாளர் சுடலை வரவேற்று பேசினார்.

மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர்கள் லாட சன்னியாசி என்ற சாமிநாதபாண்டியன், சண்முகையா, குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சிவசீத்தாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் முருகன்ராஜ் நன்றி கூறினார்.


Next Story