பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு: சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூடுதலாக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை, (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி. எண்-06081) மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் (06082) இரவு 11.35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story