"ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்"- கோவையில் ஈ.பி.எஸ் பேட்டி


ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்- கோவையில் ஈ.பி.எஸ் பேட்டி
x

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார் என்று கோவையில் ஈ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரோடு தேர்தல் விதிமுறை மீறல் குறித்து அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களை அடைத்து வைத்து திமுக ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருகிறது.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story