வேதாரண்யம் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்
வேதாரண்யம் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு நகரசபை தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி, ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள 31 தள்ளு வண்டிகளை காய்கறி, பழ வியாபாரிகள் 21 பேர், பூ வியாபாரிகள் 10 பேருக்கு வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம், துணைத்தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story