ஆல் கொண்டமமால் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ஆல் கொண்டமமால் கோவிலில்      குவிந்த பக்தர்கள்
x

ஆல் கொண்டமமால் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருப்பூர்

குடிமங்கலம்,

மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆல் கொண்டமால் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்து கால்நடைகளுக்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ஆல்கொண்டமால்

சோமவாரப்பட்டியில்ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாகபாலை சுரந்து வந்தன. சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்டது. அப் போது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றினார். இதனால் ஆல் கொண்டமால் எனவும், ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவபுற்றில் கண்ணன் குடி கொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.

காவல் தெய்வம்

கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்கி வருகிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் திருவிழாவின் போது கிராம புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் மேலும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு கால்நடைகளின் உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

கறவை பாலைகொண்டு வந்து ஆல் கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து திருநீறும் தீர்த்தமும் பெற்று செல்கின்றனர். மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து ஆல் கொண்டமாலுக்கு பால் அபிஷேகம் செய்தும் மாடுகளுக்கு பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.


Next Story