நாளை முதல் அனைத்து புறநகர் ரெயில்களும் இயங்கும்


நாளை முதல் அனைத்து புறநகர் ரெயில்களும் இயங்கும்
x
தினத்தந்தி 5 Dec 2023 12:32 PM GMT (Updated: 5 Dec 2023 2:28 PM GMT)

மழை பாதிப்பால் சென்னையில் புறநகர் ரெயில்கள் இன்று இயங்கவில்லை.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால், பல இடங்களில் ரெயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரெயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் பேசின்பாலம் - வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதுதவிர, ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது.

இதுபோல, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர் - பூங்கா ரெயில் நிலையம் இடையே, தாம்பரம் - பல்லாவரம் இடையே, பரங்கிமலை ரெயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால்,சென்னையில் புறநகர் ரெயில்கள் இன்று இயங்கவில்லை.

இந்த நிலையில் நாளை முதல் புறநகர் ரெயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது


Next Story