மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும் - அமைச்சர் முத்துசாமி உறுதி


மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும் - அமைச்சர் முத்துசாமி உறுதி
x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாங்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தற்போது பெய்துள்ள மழையின் அனுபவத்தை வைத்து முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணத்தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்.




Next Story