தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதி சாவு

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயில் மோதியதில் இறந்தார்.
அறந்தாங்கி அருகே மேனக்காட்டை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 78). ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவர் நேற்று எட்டியதளியில் இருந்து நாட்டுமங்களத்துக்கு செல்லும் வழியில் சைக்கிளை தூக்கிக்கொண்டு தண்டவாள பாதையை கடக்க முயன்றார். அப்போது அறந்தாங்கியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் பரிதாபமாக இறந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





