காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்


காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்
x

குப்பை கொட்டும் இடத்தில் காயங்களுடன் இறந்தநிலையில் கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

குப்பை கொட்டும் இடத்தில் காயங்களுடன் இறந்தநிலையில் கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயங்களுடன் முதியவர் பிணம்

அருப்புக்கோட்டை பஜார் பகுதி அண்ணா சிலை அருகே வணிகர்கள் குப்பை கொட்டும் இடத்தில் ரத்த காயங்களுடன் முதியவர் இறந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் (வயது64) என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது மகன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் இறப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story