கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 26 Aug 2023 1:00 AM IST (Updated: 26 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிட்டம்மாள் (வயது 70). இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தார். தகவலறிந்ந திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிட்டம்மாள் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிட்டம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

1 More update

Related Tags :
Next Story