கடும் வெயிலால் மயங்கி விழுந்து மூதாட்டி சாவு


கடும் வெயிலால் மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
x

கடும் வெயிலால் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளத்தூர் கீழ காந்தி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. கொத்தனார். இவரது தாய் செல்லம்மாள்(வயது 70). இவர் கீரனூர் கிள்ளுக்கோட்டை அருகே நடந்து சென்றபோது மயங்கி விழுந்து இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அதைக்கண்டு கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வந்து, செல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடும் வெயிலின் காரணமாக மூதாட்டி மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story