ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் மூட்டைகள் வரத்து அதிகரிப்பு


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  கொப்பரை தேங்காய் மூட்டைகள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் மூட்டைகள் வரத்து அதிகரிப்பு

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 92 விவசாயிகள் 721 மூட்டை கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 7 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். 385 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.71 முதல் 76 ரூபாய் 10 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது 336 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 59 ரூபாய் 20 காசுகள் முதல் 66 ரூபாய் 50 காசுகள் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 168 மூட்டைகள் அதிகரித்துள்ளன. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story